கருணை மறவர்
Thursday, May 24th, 2007நேர்மை, நாணயம், நம்பிக்கை மட்டும் அரசியல்வாதிகளிடம் இருந்தால் போதாது. அவர்கள் சிறந்த மனிதாபிமானியாகவும் இருக்க வேண்டும். அப்போதுதான் செயலில் தூய்மையும், செய்கையில் தெளிவும் பிறக்கும். தான் ஒரு சமுதாயக் காவலன் என்ற உள்ளுணர்வு தோன்றும்.
கட்டுப்பாடு மட்டும் அரசியல்வாதியை உயர்த்தாது. அவர்களிடம் கருணையும் இருக்கவேண்டும். இத்தகைய கருணை மறவராக காமராஜர் திகழ்ந்ததால்தான் இந்திய அரசியல்வானின் இளைய நிலவாக ஒளிவீச முடிகிறது.
(more…)
