விளம்பரங்கள்:

Archive for May, 2007

கருணை மறவர்

Thursday, May 24th, 2007

நேர்மை, நாணயம், நம்பிக்கை மட்டும் அரசியல்வாதிகளிடம் இருந்தால் போதாது. அவர்கள் சிறந்த மனிதாபிமானியாகவும் இருக்க வேண்டும். அப்போதுதான் செயலில் தூய்மையும், செய்கையில் தெளிவும் பிறக்கும். தான் ஒரு சமுதாயக் காவலன் என்ற உள்ளுணர்வு தோன்றும்.

கட்டுப்பாடு மட்டும் அரசியல்வாதியை உயர்த்தாது. அவர்களிடம் கருணையும் இருக்கவேண்டும். இத்தகைய கருணை மறவராக காமராஜர் திகழ்ந்ததால்தான் இந்திய அரசியல்வானின் இளைய நிலவாக ஒளிவீச முடிகிறது.
(more…)

விளம்பரத்தை விரும்பாதவர்

Wednesday, May 23rd, 2007

விளம்பரம் இல்லாத பொருள் விற்பனையாவதில்லை. விற்காத பொருள்கூட விளம்பர, உக்தியால் விற்றுத் தீர்ந்து தீர்ந்து போகிறது.

அலங்கார வளைவு என்றும், ஆள் உயர மாலை என்றும், கையடக்க நோட்டீஸ்கள், சுவரெங்கும் போஸ்டர்கள் என்றும் சுற்றிச் சுற்றி எங்கு பார்த்தாலும் விளம்பரம்தான்.
(more…)

மாற்றார் மீதும் மதிப்புடையவர்

Tuesday, May 22nd, 2007

அரசியலில் எதிர்க்கட்சியினர் எதிரணியினர்தானே தவிர எதிரிகள் இல்லை. இந்த உயர்வு இருந்தால் அதைத்தான் ஆரோக்கியமாஉ அரசியல் என்று கூறலாம். அந்த ஆரோக்கியமான அரசியல் நடத்தியவர்தான் காமராஜர்.

கொள்கையினைப் பகைக்கலாமே தவிர அதைக் கொண்டவர்களைப் பகைக்கக்கூடாது எனும் உயர்ந்த சித்தாந்திகளுடன் உறவாடியவர் இவர். ஆதலால், பெருந்தலைவர் ஓர் உயர்ந்த அரசியல் ஞானியாகவே வாழ்ந்தார்.
(more…)

தோல்வியை ஏற்கும் துணிவு

Monday, May 21st, 2007

வெற்றி என்றால் தமது தோளில் வைத்து ஆடுபவர்கள், தோல்வி என்றால் அடுத்தவர்கள் தோளில் தூக்கி வைப்பது இன்றைய அரசியலின் பழக்கம். தேர்தல் என்றால் எல்லோரும் வெற்றி பெறுவதில்லை. ஒருவர் வெற்றியால் பலர் தோல்வியை தழுவிக் கொள்வர். இது இயற்கை.

இதில் தோற்றவர் ஆளுங்கட்சியாக இருந்தால் ‘ நான் தலைருக்கு எதிர் கோஷ்டியில் இருப்பதால் வேண்டுமென்றே தோற்கும் தொகுதியை எனக்குத் தந்தார்’ – என்பதும், ‘எதிர்க் கட்சியைச் சேர்ந்தவர்கள் இறுதிக் கட்டத்தில் ஜாதிப் பிரிவினையைத் தூண்டிவிட்டார்கள்’ – என்பதும், ‘பல வாக்குச் சாவடிகளில் நடந்த தில்லுமுல்லுகளே எனது தோல்விக்குக் காரணம்’ – என்பதும் சாதாரணமாக நாம் காண்பதுதான்.
(more…)

அரசர்களை உருவாக்கிய அரசர்

Monday, May 21st, 2007

காலமும் மாறுகிறது; ருத்தும் மாறுகிறது. எது மாறிமாலும் அரசியலின் அடிப்படை மரியாதை மட்டும் மாறவேகூடாது. அரசியல்வாதிக்ள் எல்லாமும் தெரிந்தவராக இருக்கவேண்டுமே தவிர எல்லோருக்கும் தெரிந்தவராக மட்டும் இருக்கக்கூடாது.

வந்ததார்கள், போனார்கள், வருவார்கள் போவார்கள். ஆனாலும் யார் வர வேண்டும்? எது வர வேண்டும்? இதை தீர்மானிக்கும் திறன் நமக்கிருந்தால் யாரும் வந்துவிட முடியாது. அவர்களும் எதையும் செய்துவிட முடியாது.

(more…)