புள்ளி விபரப் புலி
Saturday, July 14th, 2007ஒரு தலைவனின் தகுதிகளில் தலையாயது அவனது நாட்டின் புவி இயல் அறிவுதான். மண்ணின் வளத்துக்குத் தக்கவே மனிதனின் மனவளம் அமையும் என்பதால் மண்ணைத் தெரிந்திருந்தால் அம்மண்ணின் மனித வாழ்வையும் ஊகித்து உணரலாம்.
நாட்டில் எத்தனை ஆறுகள் உள்ளன? அவை எங்கு தோன்றி எந்தக் கடலில் கலக்கின்றன? இடையில் தோன்றி இடையில் முடியும் ஓடைகள் எத்தனை? பேராறுகள், சிற்றாறுகள் எவை எவை? மலைவளம், அம்மலையில் உள்ள நீர்த்தேக்கங்கள், அதன் பாசன வழிகள், கடல் வளம், கனிம வளம் ஆகியவை பற்றிய அறிவு இருந்தால் மட்டுமே ஒரு தலைவனுக்கு தேசிய சிந்தனை வரும்.