English

மக்களுக்கு முதல் மரியாதை செய்யுங்கள்

“எனக்கு மாலை கிடைக்குமா, மரியாதை கிடைக்குமா” என்று ஆண்டவன் வாழும் ஆலயத்திறகுச் சென்றால் கூட காத்துக்கிடக்கும் மக்கள் அதிகமாகி விட்டார்கள். அரசியல் பொதுக்கூட்டத்திற்கு வரும் அரசியல் தலைவர்கள் கூட எனக்கு ஆள் உயர மாலை வேண்டும் என்று அதிகாரம் செய்யும்நிலைதான் இன்றும் உள்ளது. மாலை வாங்க காசு கொடுத்து ஆட்களைத் தயார்படுத்தும் அரசியல்வாதிகளும் இருக்கிறார்கள். காமராஜர் அரசியல் தலைவர்களில் வித்தியாசமானவர்.

Continue Reading »

காலம் தவறாமல் கடமை ஆற்றுங்கள்

குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட செயல்களைச் செய்ய முடியாமல் இருப்பவர்கள் பலர். பல்வேறு காரணங்களைச் சுட்டிக்காட்டி அரசியல் கூட்டங்களுக்குக் கூட சரியான நேரத்தில் வராத தலைவர்களும் உண்டு. கூட்டத்திற்கு தாமதமாக வந்தால்தான் பார்வையாளர்களின் கவனத்தையும் கவர்ந்து இழுக்க முடியும் என்ற எண்ணத்தோடு கூட்டத்திற்கு வருபவர்களும் உண்டு.

Continue Reading »

பொறுமையைக் கடைப்பிடியுங்கள்

இப்போதுள்ள அரசியல் தலைவர்கள் பலர் மக்களிடம் உங்களுக்கு நான் அதைச் செய்கிறேன், இதைச் செய்கிறேன் என்று சொல்லி தேவையில்லாத வாக்குறுதிகளை வழங்குகிறார்கள்.

தேவையான செயல்களைக்கூட செய்ய மறுக்கிறார்கள். அவசரப்பட்டு சில செயல்களைச்செய்து அவமானத்திலும் அமுங்கிப் போகிறார்கள். அவசரத்தில் அள்ளித் தெளித்த கோலங்களாக சில அரசியல் தலைவர்கள் இருப்பது மிகவும் வருத்தமளிக்கும் விஷயமாகும்.

Continue Reading »

பார்புகழ் பெற்ற தலைவர்

கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாட்டோடு சேர்ந்த ஆண்டு எது? ஆயிரத்து தொள்ளாயிரத்து அய்ம்பத்தாறாம் ஆண்டு ஆகும்.

கன்னியாகுமரியில், ஏன்கனவே அய்ந்தாம் வகுப்பு வரை கட்டாய இலவசக்கல்விமுறை நடைமுறையில் இருந்தது. பள்ளிகளில் கஞ்சி கொடுக்கும் ஏற்பாடும் இருந்தது. அங்கே பல தொடக்கப் பள்ளிகள், அரசின் நிதி உதவியைப் பெறும் தனியார் பள்ளிகள்.

Continue Reading »

தெளிந்த காட்சியர்

அறுபத்து இரண்டாம் ஆண்டு, பெரியதொரு கருத்துப்போராட்டம் நடந்தது.

சிற்றூர்ப் பள்ளிகளை நடத்தி வந்த மாவட்ட ஆட்சிக்குழுக்கள் எடுபட்டன. ஊராட்சி ஒன்றியங்களிடம் தொடக்கப் பள்ளிகள் ஒப்புவிக்கப்பட்டன.

தொடக்கப்பள்ளிகளை ஆய்வு செய்யும் ஆய்வாளர்களை ஊராட்சி ஒன்றியங்களின் கட்டுப்பாட்டின் கீழ்க் கொண்டுவர வேண்டுமென்பது, தில்லியிலிருந்து வந்த பரிந்துரை, மாநலக்கள் பலவும் உடனடியாக அதை ஏற்ற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்தின. சென்னை மாநிலம் அப்பரிந்துரையை ஏற்கவில்லை.

Continue Reading »

Next »