விளம்பரங்கள்:

சிந்தனைத் தெளிவு

ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அய்ம்பத்து நான்காம் ஆண்டு ஆகஸ்டு பன்னிரண்டாம் தேதி அப்போதைய தலைமைச் செயலர் திரு. ராமுன்னிமேன்ன் அய்.சி. எஸ். முல் அமைச்சரிடம் சென்றார்.

“ஆந்திரப் பிரதேசத்தில், திருப்பதியில் ஒரு பல்கலைக் கழகம் நிறுவப்போகிறார்கள். அதன் வேந்தர் தலைமை நீதிபதி திரு கே.சுப்பராவிடமிருந்து எனக்கு ஒரு கடிதம் வந்திருக்கிறது.

Continue Reading »

புள்ளி விபரப் புலி

ஒரு தலைவனின் தகுதிகளில் தலையாயது அவனது நாட்டின் புவி இயல் அறிவுதான். மண்ணின் வளத்துக்குத் தக்கவே மனிதனின் மனவளம் அமையும் என்பதால் மண்ணைத் தெரிந்திருந்தால் அம்மண்ணின் மனித வாழ்வையும் ஊகித்து உணரலாம்.

நாட்டில் எத்தனை ஆறுகள் உள்ளன? அவை எங்கு தோன்றி எந்தக் கடலில் கலக்கின்றன? இடையில் தோன்றி இடையில் முடியும் ஓடைகள் எத்தனை? பேராறுகள், சிற்றாறுகள் எவை எவை? மலைவளம், அம்மலையில் உள்ள நீர்த்தேக்கங்கள், அதன் பாசன வழிகள், கடல் வளம், கனிம வளம் ஆகியவை பற்றிய அறிவு இருந்தால் மட்டுமே ஒரு தலைவனுக்கு தேசிய சிந்தனை வரும்.

Continue Reading »

தான் இறங்கினாலும் தரம் இறங்காதவர்

சிறுசிறு அரசியல் நடவடிக்கைகளில் இறங்கி மெல்ல மெல்ல அரசியல்வாதியானவர்களும் உண்டு. தொண்டு செய்து சமூகத்துக்உ உதவும் தோள்களைப் பார்த்து தலைவர்கள் அழைத்துச் சேர்த்ததால் அரசியலுக்கு வந்தவர்களும் உண்டு.

அரசியல் தலைவர்களின் உறவாய் பிறந்ததாலே அரசியல்வாதியாக ஆனவர்கள் – பணபலமும், புகழ் ஆசையும் கொண்டு அரசியலைச் சார்ந்தவர்கள்-சமூக விரோதச் செயல்களை மறைக்கவும் சட்டத்தின் பிடியில் சிக்காமல் இருக்கவும் அரசியல்வாதி ஆனவர்கள் இப்படி பல ரகத்தினர் உண்டு.

Continue Reading »

ஜனநாயகவாதி

இந்தியா மிகப் பெரிய ஜனநாயக நாடு. இங்குள்ள அரசியல்வாதிகள்தான் அதனைக் கடைப்பிடித்துக்காப்பாற்றவேண்டும். ஜனநாயக் காவல்ர்களாக அரசியல்வாதிகள் நடந்துகொள்ளும் தோதுதான் ஒரு நாட்டின் பாரம்பரியம் காப்பாற்றப்படும்.

சர்வாதிகார நாடுகளில் ஆட்சிமுறையும் அமலாக்கமும் எளிதாகிவிடும் சூழ்நிலை உண்டு. அங்கே எதிர்ப்பு நசுக்கப்படும், போராட்டம் களையெடுக்கப்படும். மாறாக ஜனநாயக நாட்டில் எழுத்துச் சுதந்திரம், பேச்சுச் சுதந்திரம்யாவும் இருப்பதால் எல்லாமே எதிர்ப்புக்கிடையேயும் போரட்டத்துக்கடையேயும்தான் நிறைவேறும்.

Continue Reading »

பாராட்டை விரும்பாத பாமரர்

பாராட்டு என்பது வளர்பவர்களுக்கு ஊட்டச்சத்து போன்றது. ஆனாலும், பாராட்டில் மயங்குபவர்களுக்கு அப்பாராட்டே புகழ்க் கொல்லியாகிவிடும். பாராட்டை விரும்பாதவர்கள் இருக்கமாட்டார்கள் என்று நாம் படித்திருந்தாலும், பாராட்டை விரும்பாத பாமரர் ஒருவர் இருக்கிறார் என்பதை இப்போது படிக்கிறோம்.

Continue Reading »

« Prev - Next »