தீவிர அரசியல் செயற்பாடு தேசத்தொண்டு
காமராஜ் முழு மூச்சாக தேச சேவையில் இறங்கினார். காந்திஜியின் தலைமையி நடைபெறும் சுதந்திர அறப்போராட்டத்தில் தீவிர மன பங்கு கொண்டார்.
காந்திஜி ஒத்துழையாமை இயக்கத்தைத் தீவிரமாக நடத்திக் கொண்டிருந்த சமயம் அது. தமிழகத்திலும் மூலைமுடுக்கெல்லாம் ஒத்துழையாமை இயக்கம் முழு வேகத்தில் நடந்துக்கொண்டிருந்தது.
