English

ஏழை பங்காளர்

அவர் பேச தொடங்கினார், பொது கூட்டத்தில். அமைதியான குரல், அக்ராசனாதிபதி என மற்றவர்களை பொலச்சொல்லாமல், தலைவர் அவர்களே என ஆரம்பித்தார். நேரம் ஆக ஆக தமிழன்னை அவர் நாவிலே நடனமாடத் தொடங்கினாள். வரலாறு கூறினார், தமிழரின் பண்பாட்டை உரை நடையில் பாடினார், நாடாண்ட தமிழினம் ஏன் தலை தாழ்ந்தது என அடுக்கடுக்கான விளக்கங்கள். நேரம் போவதே தெரியவில்லை. ஐம்பது பேராக இருந்த கூட்டத்தில், சிறிது நேரத்தில் ஆயிரம் பேர் சூழ்ந்துவிட்டனர்.
Continue Reading »

தீண்டாமை தீர்த்தவர்

‘தீண்டாமை என்பது பாவச் செயல்’ என்றார் காந்தி. எனவே அவரைத் தொடர்ந்து அவர் வழியில் வந்த கருப்புக் காந்தியான காமராஜர் அவர்களும் தீண்டாமையை வெறுத்தார். தீண்டாமையை அகற்றப் பாடுபட்டார்.

அரசியலில் பெருந்தலைவர் என்ற பெயரும் புகழும் பெற்றபின் தீண்டாமையை வெறுத்தவர் அல்லர். பிள்ளைப் பருவம் முதலே காமராஜர் தீண்டாமையை எதிர்ப்பதில் தீவிரவாதியாகவே இருந்திருக்கிறார்.
Continue Reading »